அக்கம் பக்கமுள்ளவனை
தொட்டுப்பேசினால் ஆச்சாரம்
கெட்டுவிடுமென சாதித் தடுப்பை
வைத்துக்கொண்டு,,, சந்திரனைத் தொட்டுவர
சந்திரயானை அனுப்பி சந்தோசப்படுகின்றோம்
அறிவியலில்கூட
ஆதாரமில்லாத சாதியை
இன்னும் எத்தனை நாள் அணைத்தபடி
படுத்துக்கொண்டிருப்பீர்கள்,,,?!
அனைவரும் சேர்ந்து
அணைக்கலாம் வாருங்கள் சா “ தீ “யை,,,.
நாங்குநேரி மட்டுமல்ல -
பல ஊர்களின் நிலையும் இதுதான்
உன்னையும் என்னையும்
புதைப்பதற்கு ஒரு குழிதான்
தரப்போகிறது
பூமி இந்த எழவுல
எதுக்குடா வாழும்போது
பதற வைக்குது உங்க சாதி
பாலும், தேனும் பக்குவமாய்
நீ உண்டாலும் பழைய கஞ்சியும் பட்டமிளகாயும்
நான் உண்டாலும் உனக்கும்
எனக்கும் கழிப்பறைப்போனால்
பீய்தான் வரப்போகிறது
உனக்கு என்ன நெய்யா வரப்போகிறது?
செத்துப்போனால் மறுநாளே
நீயும் நானும் நாறதான் போகிறோம்
நீ என்ன
வாசனை வீசவாப் போகிறாய்
என்னடா மேல்சாதி கீழ்சாதி
ஆசிரியர்களே பாடப்புத்தகத்தில்
முதல் பக்கத்திலுள்ள தீண்டாமை
மனிதத்தன்மைற்ற செயலுக்கும் தீண்டாமை பெருங்குற்றம்
என்பதற்கும் தீண்டாமை
ஒரு பாவச்செயல் என்பதற்கும்
தினமும் விளக்கம் சொல்லி பாடத்தை நடத்துங்கள்
அப்போவாவது மரமண்டையில்
பதியட்டும் எல்லோரும்
மனிதர்களே என்பது புரியட்டும்
எல்லோரும் கடவுள் படைப்பென
நம்பும் நீங்கள்
சகமனிதனை கேவலப்படுத்துவது
இறைவனின் படைப்பை கேவலப்படுத்துவதுதானே,,,
மனிதனை மனிதனாக நினையுங்கள்
வாழும்காலம் கோடி வருசமல்ல
இதில் ஏன் சாதிமதம் சொல்லி
மனிதனை மனிதனே அழிக்கும் செயல்,,,?!